• waytochurch.com logo
Song # 14992

iratham kayam kuthum இரத்தம் காயம் குத்தும்


இரத்தம் காயம் குத்தும்
நிறைந்து நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும்
சூடுண்ட சிரசே
முன் கன மேன்மை கொண்ட
நீலச்சை காண்பானேன்
ஐயோ வதைந்து நொந்த
உன்முன் பணிகிறேன்

நீர் பட்ட வாதை யாவும்
என் பாவப் பாரமே
இத்தீங்கும் நோவும் சாவும்
என் குற்றம் கர்த்தரே
இதோ நான் என்றுஞ் சாக
நேரஸ்தன் என்கிறேன்
ஆனாலும் நீர் அன்பாக
என்னைக் கண்ணோக்குமேன்

நீர் என்னை உமதாடாய்
அறியும் மேய்ப்பரே
முன் ஜீவன் ஊறும் ஆறாய்
என் தாகம் தீர்த்தீரே
நீர் என்னைப் போதிப்பிக்க
அமிர்தம் உண்டேனே
நீர் தேற்றரவளிக்க
பேரின்பமாயிற்றே

உம்மண்டை இங்கே நிற்பேன்
என்மேல் இரங்குமேன்
விண்ணப்பத்தில் தரிப்பேன்
என் கர்த்தரை விடேன்
இதோ நான் உம்மைப் பற்றி
கண்ணீர் விட்டண்டினேன்
மரிக்கும் உம்மைக் கட்டி
அணைத்துக் கொள்ளுவேன்

என் ஏழை மனதுக்கு
நீர் பாடுபட்டதே
மகா சந்தோஷத்துக்கு
பலிக்கும் மீட்பரே
என் ஜீவனே நான் கூடி
இச்சிலுவையிலே
உம்மோடென் கண்ணை மூடி
மரித்தால் நன்மையே

நான் உம்மைத் தாழ்மையாக
வணங்கி நித்தமே
நீர் பட்ட கஸ்திக்காக
துதிப்பேன் இயேசுவே
நான் உம்மில் ஊன்றி நிற்க
சகாயராயிரும்
நான் உம்மிலே மரிக்க
கடாட்சித் தருளும்

என் மூச்சொடுங்கும் அந்த
கடை இக்கட்டிலும்
நீர் எனக்காய் இறந்த
ரூபாகக் காண்பியும்
அப்போ நான் உம்மைப்பார்த்து
கண்ணோக்கி நெஞ்சிலே
அணைத்துக்கொண்டு சாய்ந்து
தூங்குவேன் இயேசுவே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com