yen meedhu anbu koorndhuஎன் மீது அன்பு கூர்ந்து
என் மீது அன்பு கூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் இரத்தம் சிந்தி
கழுவினீர் குற்றம் நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால்
உமக்கென்று வாழ்ந்திட-2
ஆராதனை உமக்கே
அனுதினமும் உமக்கே-2
1.பிதாவான என் தேவனே
தகப்பனே என் தந்தையே-2
மாட்சிமையும் மகத்துவமும்
உமக்குத்தானே என்றென்றைக்கும் -2
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே- என் மீது அன்பு
2.உம் இரத்தத்தால் பிதாவோடு
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்-2
கறைபடாத மகனாக (மகளாக)
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்-2
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே- என் மீது அன்பு
3.மாம்சமான திரையை அன்று
கிழித்து புது வழி திறந்தீர்- உம் -2
மகா மகா பரிசுத்த - உம்
திருச்சமுகம் நுழையச்செய்தீர்-2
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே-2-என் மீது அன்பு