naal muluthum paada varam நாள் முழுதும் பாட வரம் தாராய்
நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு
நாதனே உன்னை நான்
வாழ் நாள் முழுதும் பாட வரம் தாராய் – இயேசு
நாதனே உன்னை நான்
சிந்தையில் என்றும் நிறைந்தவனே – கொடும்
சிலுவையில் எனக்காய் மரித்தவனே
தந்தையாய் தாயாய் தலைவனாய் தெய்வமாய்
தரணியில் எங்கும் நிறைந்தவனே
இயேசுவின் நாமம் இதயத்தின் கீதம்
இறைவனின் பாதம் எனக்கது போதும்
கல்வாரி நாமம் கலங்குவார் தேற்றும்
கருணையின் நெஞ்சத்தில் திகழ்பவனே