naan kanamalpona adallavo நான் காணாமற்போன ஆடல்லவோ
நான் காணாமற்போன ஆடல்லவோ
கர்த்தர் என்னைத் தேடுகின்றார்
ஆதாமைப் போல ஆண்டவர் வார்த்தையை
அன்புமீறி நான் நடந்தேன்
ஆபேலைக்கொன்ற காயீனைப்போல
வன்கொலை நான் புரிந்தேன்
ஆரம்ப முதலில் விழுந்த
அன்பர் என்னைத் தேடுகின்றார்
கைதூக்கி என்னைக் காப்பாற்ற இழுத்தான்
காட்டித்தந்த யூதாஸ் தானே
கல்வாரிச் சிலுவை கர்த்தருக்குத் தந்து
பெரும்பழி நான் சுமந்தேன்
கல்லோடு முள்ளில் கால்பின்னிக் கிடந்தேன்
கர்த்தர் என்னைத் தேடி வந்தார்