ennai munnarindhu munkurithavarae என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே
வேறொன்றையும் நான் கேட்கவில்லை
வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே
Chorus:
என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
இறுதி வரை உம்மில் மாற்றமில்லை
ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
அதிசயமே என்னை நீர் அழைத்தது
தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே