thayinum melai enmel தாயினும் மேலாய் என்மேல்
Thayinum Melai Enmel
தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே
என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
உமக்காக எதையும் செய்வேன்
கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன்
எந்தன் கால்கள் இடறும் போது
விழுந்திட மாட்டேன் – உம்
தோளின் மீது ஏறிக்கொண்டு
பயணம் செய்வேன்