immattum uthavina இம்மட்டும் உதவின தேவன் நீர்
இம்மட்டும் உதவின தேவன் நீர்
இறுதிவரை என்னோடு நீர்
ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்
ஆதரவாய் என் உடனிருந்தீர்
எபினேசரே எபினேசரே
கோடி கோடி நன்றி ஐயா
1. காற்றும் மழையும் பார்க்கவில்லை
உள்ளங்கை மேகமும் காணவில்லை
வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
வளமாக மாற்றி விட்டீர்
2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
கரங்களில் ஏந்திக் கொண்டீர்
3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
கிருபையினாலே அழைத்து வந்தீர்
அழியாமல் காத்து கானானில் சேர்த்து
உம் துதி சொல்ல வைத்தீர்