sonnathai seiyumalavum சொன்னதை செய்யுமளவும்
சொன்னதை செய்யுமளவும்
உன்னை கைவிடவேமாட்டேன்
சோர்ந்து போகாதே என் மகனே
சோர்ந்து போகாதே என் மகளே
கைவிடவேமாட்டேன் – உன்னை
1. தண்ணீர்கள் நீ நடந்தாலும்
மூழ்கி போகமாட்டாய்
அக்கினி நடுவே நீ நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய் – சோர்ந்து
2. உனது ஜெபத்தை நான் கேட்டேன்
உனது பொருத்தனையை மறக்கவில்லை
நிச்சயம் பதில் தருவேன் நீ
தப்பாமல் கனி கொடுப்பாய் – சோர்ந்து
3. உன்னை என் உள்ளம் கைகளினால்
உருவாக்கி வைத்துள்ளேன்
உன் மதில்கள் என் கண்முன்னே
எப்போதும் இருக்கிண்டது – சோர்ந்து
4. யாக்கோபு என்னும் சிறுபூச்சியே
இஸ்ரவேலின் சிறு கூட்டமே
பயப்படாதே கலங்கிடாதே என்றுமே
நான் உனக்கு துணை நிற்கிறேன் – சோர்ந்து
5.உன்னோடு கூடவே நான் இருந்து
பெரிய காரியங்கள் செய்திடுவேன்
மலைகளை மிதித்திடுவாய்
குன்றுகளை பொடியாக்குவாய் – சோர்ந்து