pasumaiyaana pulveliyil padukka vaippavarae பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
பசுமையான புல்வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா
1. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர்
2. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய் நடத்தி செல்கிறீர்
3. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே எனக்கு பயமில்ல
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா