paadu pokka paril vandha பாடு போக்க பாரில் வந்த பாலகன்
பாடு போக்க பாரில் வந்த
பாலகன் இயேசுவை துதித்து பாடுவேன்
கூட இருந்து நம்மை நடத்தும்
ஆவியானவரை நாடுவேனே
பாட பாட துயரமெல்லாம்
ஓடும் ஓடும் தூர தூர
வாயமூட மூட மூட
கவலை எல்லாம் வருமே கூட
1. வெறும் கழுதையின் தாட தாட
ஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட
துதியின் ஆடை போட போட
எதிரியை வைக்கும் ஓட ஓட
2. இயேசு தொட்ட உடனே மறைந்தது
விதவை மகனின் பாட பாட (பாடை)
நீயும் ஆண்டவரை தேட தேட
மனசுல ஓடும் ஜீவ நீரோட
3. இயேசு காட்டிய பாதைய மறந்து
யோனா நினைத்தான் விலகி யோட
கப்பலில் இருந்து கடலில் போட
கரையை சேர்ந்தான் கிருபை யோட