kuyavane nal kuyavane குயவனே நல் குயவனே
குயவனே நல் குயவனே
என்னை நீரே உருவாக்கும்
வனையுமே நீர் வனையுமே
உம் கைகளால் வனைந்திடுமே
உம் சித்தம் என்னில் நிலைக்க
நான் தந்தேன் என்னையே
என் ஆயுள் நாட்களெல்லாம்
உம் அன்பில் வாழ்ந்திடுவேன்
நீரே என்னை வனைபவர்
நீரே என்னை காப்பவர்
உந்தன் அன்பை முழுவதும் சேர்த்து
என்னை உருவாக்கும்
உந்தன் சாட்சியாய் உலகில் நிற்க
தகுதிப்படுத்திடுமே
என்னை தந்தேன் முழுவதுமாய்
எந்தன் தேவனே
நீர் இல்லாமல் நானும் இல்லை
அன்பில்லாமல் உயிர்கள் இல்லை …ஓ