ennai azhaithavare entrum nadathuveerae என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே
எந்த பாதையையும் தாண்டிடுவேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்
(உங்க கரம் இருக்க பயமில்லையே)
1 கருவிலே என்னை கண்டவரே
பெயர்சொல்லி என்னை அழைத்தவரே
நன்மைகள் எனக்காய் செய்பவரே
வழுவாமல் என்னை காத்தவரே
இனிமேலும் என்னை காப்பவரே
2 புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
மரணத்தின் பள்ளத்தாக்கு சூழ்ந்திட்டாலும்
வாக்கென்னும் கோலினால் பெலப்படுத்தி
எனக்கான நன்மையை காண செய்வீர்
என்னை அழைத்தவரே தினம் நடத்துவீரே
உங்க கரம் இருக்க பயமில்லையே
எந்த பாதையிலும் நான் நடப்பேன்
எந்த சூழ்நிலையும் மேற்கொள்ளுவேன்
(உங்க கரம் இருக்க பயமில்லையே)