mannithu maranthu vittaar மன்னித்து மறந்து விட்டார்
மன்னித்து மறந்து விட்டார்
நாம் செய்த பாவமெல்லாம்
வென்று முடித்து விட்டார்
நம் சாப ரோகமெல்லாம்
சேற்றில் விழுந்த மனிதரை தூக்க
மன்னவன் மனுவாய் உருவெடுத்தார்
மரணத்தை வென்று மூன்றே நாளில்
மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார்
1.மந்தையை விட்டு விலகியதால்
முட்களுக்குள்ளே மாட்டிக்கொண்டோம்
இழந்து போனதை தேடி மீட்கவே
மனுஷகுமாரன் மண்ணிலுதித்தார்
2.பாவிகளாய் நாம் இருக்கையிலே
கிறிஸ்து நமக்காய் மரித்ததினால்
இரத்தத்தினாலே மீட்கப் பட்டோமே
நீதிமானாக மாறிவிட்டோமே