panivizhum ravinil பனி விழும் இராவினில்
பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் …..
விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே …
ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே
மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை
மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை