nee ennaal marakapaduvathillai நீ என்னால் மறக்கப்படுவதில்லை
நீ என்னால் மறக்கப்படுவதில்லை
உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
எந்தன் கையில் இராஜ முடி நீயே
எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்
என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2
என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை-2
1.கர்த்தர் என்னை கைவிட்டார்
ஆண்டவர் மறந்துவிட்டார்
என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2
தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்
பாலகனை மறப்பாளோ
அவள் மறந்து போனாலும்
நான் உன்னை மறப்பதில்லை சீயோனே
நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே
2.நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை-2
வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே
பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே-என் சீயோனே
3.எழும்பு எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறிவிட்டு எழும்பிடு-2
அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே
உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே
இனி நீ தீங்கை காண்பதில்லையே
இனி நீ தீங்கை காண்பதில்லையே-என் சீயோனே