deva neer vaarumae தேவா நீர் வாருமே
தேவா நீர் வாருமே
உந்தன் கிருபை தனை
என்றும் தாருமே
உந்தன் அன்பை தினமும்
நான் ருசிக்கவே
உந்தன் கரம் பற்றி தினமும்
நான் நடக்கவே
உந்தன் ஆவி
எண்ணில் தங்கியே
கிருபை நடத்தட்டுமே
எந்தன் கண்ணீரை
துடைத்து நடத்திய
தூயனே உம்மை
நான் தொழுவேன்
பாவ பாரத்தை
இறக்கி என்னையே
தூய்மை படுத்திய
உம்மை பாடுவேன்
என்றும் தூய தூய தூயரே
நான் பாடவே
எந்தன் நெஞ்சில்
இருந்த அன்பை உம்மை
தினமும் சேரவே
வெறுமையாய் அலைந்தேன்
வீண் வம்பு வளர்த்தேன்
உமக்கென கொடுக்க
எனக்கென்றும் இல்லை
தரணியில் நான் என்றும்
உந்தன் புகழ் பரப்ப வேண்டும்
கருணையின் வடிவே
உந்தன் பெயர் சொல்ல வேண்டும்
என் மன அமைதியை
உலகெல்லாம் தேடி
எதுவெல்லாம் செய்தேன்
எனக்கெல்லாம் செய்தீர்
அன்பே உன் சிலுவையின்
அன்பினை மறந்தேன்
இருந்தும் என்னோடு
கூடவே இருந்தீர்