devan seitha nanmaikalkkellam தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
தேவன் செய்த நன்மைகளுக்கெல்லாம்
நன்றி சொல்லிடவே-2
நாவும் போதாது நாளும் போதாது
ஆயுளும் போதாது-2
1.வாழ்வின் வழியில் கால்கள் மேலும்
தளர்ந்து வீழாமல்-2
தாங்கி நடத்தலை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
2.பாவியாம் என்னை மீட்டிட இயேசு
கல்வாரியில் தனது-2
ஜீவன் தந்தது நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
3.ஆணிகள் காலில் அடிக்கப்பட்டது
என் பெயர்காயன்றோ-2
சிலுவையின் அன்பை நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த
4.முள்முடி சூடி தொங்கப்பட்டது
என் பெயர்க்காயன்றோ-2
ஒவ்வொரு நாளும் நினைக்கையிலே
என் கண்கள் நிறைகின்றதே-2-தேவன் செய்த