thirumba thirumbavum nee kattapaduvaai திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2)
விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் (2)
சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப
இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப
மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் (2)
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார் (2)
உனக்கு நியாயம் செய்திடுவார் – திரும்ப