irakkamum nirainthorai kirubaiyum கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்
கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்
உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரே
உந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்
என்றும் உம்மோடு வாழ்ந்திட
எந்தன் உள்ளம் கவர்ந்தவர்
அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரே
அன்பின் உருவே பரிசுத்தர் நீரே
மகிமை மாட்சிமைக்குப் பாத்திரரே
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே
மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியே
உந்தன் அழகிற்கீடில்லயே
வானம் பூமி அனைத்தையும் படைத்தீரே
எனக்காக யாவும் செய்தீரே
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே
இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்
உந்தன் மகத்துவம் போற்றுவோம்
நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்
நன்றியாலே ஆராதிப்போம்
எந்தன் உள்ளம் கவர்ந்தவரே