kartharai nambinavan கர்த்தரை நம்பினவன்
கர்த்தரை நம்பினவன்
என்றென்றும் பாக்கியவான்
கர்த்தரை நம்பினவன்
என்றென்றும் செழித்திருப்பான்
அவன் சோர்ந்து போவதில்லை
அவன் வெட்கம் அடைவதில்லை
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
அவன் சொல்வதெல்லாம் நடக்கும்
அவன் பெலத்தின்மேல் பெலனடைந்து
அவன் கழுகைபோல் எழும்பிடுவான்
அவன் ஆஸ்தி பெருகிடுமே
அவன் ஆயுள் நீடித்திடும்
அவன் விருப்பம் நிறைவேறும்
அவன் சத்துரு விழுந்திடுவான்
அவன் கொம்பு உயர்த்தப்படும்
அவன் சீயோனை சேர்ந்திடுவான்