karthar emacku nanmai seidhaar கர்த்தர் எமக்கு நன்மை
கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t)
கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்
பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம்- (2)
1. கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிக
கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்
சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ – 2
களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்த
நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்
ஆமேன் ஆலேலூயா – 8
2. தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிக
செழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – (2) எம்
இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய – 2
பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்- மீட்பின்
சாட்சிகளை சபையில் சொல்லுவோம்
ஆமேன் ஆலேலூயா – 8
3. மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார் – எம்
வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார் – (2) எம்
ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார் – 2
யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் – பரிகாரி
இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் ஆலேலூயா – 24