en devanai thedi vanthen என் தேவனைத் தேடி வந்தேன்
என் தேவனைத் தேடி வந்தேன்
உம் சமூகம் நாடி வந்தேன்
வழி நடத்தும் என்னை
வழி நடத்தும் (2)
1.என் கன்மலையே நிம்மதியே
எந்தன் ஆருயிரே
போற்றி பாடுகிறேன்
உம்மை உயர்த்தி பாடுகிறேன் (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு
ஆராதனை (2)
2. என் பெலனும் என் கோட்டையும்
அடைக்கலம் நீரே
மகிழ்ந்து பாடுகிறேன்
உம்மை புகழ்ந்து பாடுகிறேன் (2)
3. உந்தன் கரம் இன்று என்னை
வழி நடத்தட்டுமே
அர்ப்பணிக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமே (2)
4. உந்தன் சித்தம் என்னில் இன்று
நிறைவேறட்டுமே
ஆவியானவரே என்னை ஆட்கொள்ளுமே (2)