en sindhai enthan ninaivugal yellam என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்
என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்
என் தேவன் நீரே ஆனீரே
என் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்
என்றனென்றும் நீரே ஆனீரே
எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்தி
என்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை
1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரே
என் கேடகமும் அரணும் ஆனவர் நீரே
எனக்காக சிலுவையை அன்பாய் சுமந்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக
2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரே
என் சுகமும் ஜீவனும் பெலனும் நீரே
எனக்காக அடிமை கோலம் எடுத்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக