enthan ullam ummai paadidum எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்
என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்
என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்
நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே