irul soozhum nearam oli mangum இருள் சூழும் நேரம் ஒளி மங்கும்
Lyrics
இருள் சூழும் நேரம் ஒளி மங்கும் காலம்
நான் என்ன செய்வேன் என்று நினைக்கையில்
ஒளியாய் வருவீர் வழியைத் திறப்பீர்
திறந்த வாசல் உனக்கு உண்டு என்றீர்
திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்
தனிமையின் நேரம்
துணை யாருமின்றி
கலங்கி நான் நிற்கும் போது
பயம் வேண்டாம் என்று
பெலன் தந்திடுவீர்
அதிசயங்கள் கண்டிட செய்வீர்
திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்
தனியாக நிற்கும்போது
என் துணையாக வந்திடுவீர்
மனம் நொந்த நேரத்திலும்
மறுவாழ்வு தந்திடுவீர்
ஒரு வழி அடைந்தாலும்
புது வழி திறக்கும்
தாவீதின் திறவுகோல் உடையவரே
திறந்த வாசல் எனக்குண்டு
திறந்த வாசல் எனக்குண்டு
தேவன் திறந்திட்டதை
ஒருவரும் அடைக்கமுடியாதே
திறந்த வாசல் எனக்கு நிச்சயம்