yesuvae ummai yallamal இயேசுவே உம்மையல்லாமல்
இயேசுவே உம்மையல்லாமல்
நாங்கள் மாநிர்பாக்கியர்
எந்த நன்மையுமில்லாமல்
கெட்டுப் போன மானிடர்
நாங்கள் பாவ இருளாலே
அந்தகாரப்பட்டவர்
சர்ப்பத்தின் விஷத்தினாலே
தாங்கா நோய் பிடித்தவர்
இந்தக் கெட்ட லோகம் எங்கும்
பாவக்கண்ணி மிகுதி
தேவரீராலன்றி யாரும்
தப்பி வாழ்வதெப்படி
இயேசுவே, பலத்தைத் தந்து
அந்தகாரம் அகற்றும்
ஞானக்கண்ணைத் தெளிவித்து
எங்கள் மேல் பிரகாசியும்