aattukutti yaanavarae adikapateerae ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே
ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே
எங்களுக்காகவே பலியானீரே
உம் இரத்தம் சிந்தியதால்
என் சாபங்கள் நீங்கியதே
என் பாவம் போக்கவே
உம் ஜீவன் தந்தீரே
காளைகள் போல சூழ்ந்தனரே
கன்னத்தில் அறைந்து துப்பினரே (2)
விசாரணை நடத்தி வீண் பழி சுமத்தி
காவலில் வைத்தனரே (2)
தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காக
தேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும்
நரிகள் போல சூழ்ந்தனரே
இழிவாய் பேசி இகழ்ந்தனரே (2)
மினுக்கான உடையை உமக்கு உடுத்தி
பரியாசம் செய்தனரே (2)
தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காக
தேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும்
சிங்கத்தை போல சூழ நின்று
சாட்டையால் உம்மை அடித்தனரே (2)
தலையில் முள்முடி கால் கரங்களிலில் ஆணி
சிலுவையில் தொங்கினீர் (2)
தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காக
தேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும்
மரணமே உன் கூரெங்கே ?
பதாளமே உன் ஜெயம் எங்கே?
ஆட்டுக்குட்டியானவராய் சிலுவையில் மரித்தவரே
யூத ராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தவரே