aasaiyai kooduvom ஆசையாய்க் கூடுவோம்
ஆசையாய்க் கூடுவோம்
அன்புடன் பாடுவோம்
ஈசனார்தம் நேசமாக
விந்தை கொண்டாடுவோம்
மா சந்தோசம் மா கெம்பீரம்
மாந்தர் நாமெல்லாருக்கும்
மாட்சியுறும் காட்சி காண
வாரும் பெத்லகேமுக்கு
முன்னணை மீதினில்
சின்னவோர் பாலனாய்
உன்னதனொரே குமாரன்
ஒய்யாரமாய் தோன்றினார்
ரூபமில்லாதவர்
சோபித பூரணர்
சாபம் நிறை பாவ மாம்ச
ரூபமெடுத்து வந்தனர்
தேசுறை பாலகர்
ஜெசென்னும் பேரினர்
மாசு திகில் நீக்கி நம்மை
மீட்க மனுவாயினர்