aah sundara veedae en sobidha veedae ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
(1 ) மா மகிமை ஆ மனோஹரமாம்
தேவன் திரு கைநிர்மாநித்ததாம்
நான் சேருவேனே சொர்க்க ஆலயமே
(2 )மின்னுதே ஈராறு வாசல்களும்
விண்ணுலகின் நித்ய ஆலயத்தில்
ஆ சௌபாக்யமே நான் வாழ்ந்திடுவேன்
(3 ) சீர்எழும் பொன் தெரு வீதிகளால்
பேர்பெறும் சுந்தர வீடதையே
இதோ தூரத்திலே அதைக் காண்கிறேன் நான்
(4 ) தூயர் அல்லேலூயா பாடிடுவார்
தூதர் பொன் வீணைகள் மீட்டிடுவார்
ஆ கீதநாதம் இதோ கேட்கிறதே
(5 ) பாவ சரீரமும் மாறிடுமே
ராஜன் யேசுவையே காண்பதற்காய்
நான் போவதாலே என்ன ஆனந்தமே