azhagaana iravin neram kulirale ulagam vaadum அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும்
அழகான இரவின் நேரம் குளிராலே உலகம் வாடும்
சிசுவாக இயேசு பாலன் உலகில் உதித்தார்
சங்கீதம் தூதர் பாட வனமீது மேய்ப்பர் கேட்க
மனமெங்கும் பூரிப்பாக நெஞ்சம் மகிழ்ந்தார் அன்று
1. அன்னைமரி கைகள் மீது தேவன் அமர்ந்தார்
தேவன் நம்மேல் வைத்த அன்பை சொல்லி மகிழ்ந்தார்
மீட்பைத்தர வந்தாரே என்று புகழ்ந்தார்
தேவன் தந்த வார்த்தை இவர் என்று நினைத்தார்
வாழ்வை தந்த தெய்வமே வாழ்க என்று சொல்ல
2. ஆதாம்முதல் யோவான் வரை சொல்லியிருந்தார்
தேவன் வரும் நாளுக்காக பார்த்துஇருந்தார்
வேதம் சொல்லும் நம் மீட்பர் என்று வருவார்
எண்ணம் எங்கும் தினந்தோறும்பார்த்து இருந்தார்
மீட்பை தந்த தெய்வமே வாரும் என்று சொல்ல
3. உன்னதத்தை நோக்கி நெஞ்சம் மாற்றம் பெறுமே
உண்மை நிலை எங்கும் பூமி மாற்றம் கொள்ளுமே
இல்லை என்ற ஏழைக்கொரு காலம் வந்ததே
இன்ப நிலை ஏகும் காலம் தெய்வம் தந்ததே
நீரே எங்கள் தெய்வமே வாழ்க என்று சொல்ல