allaeluyae allaeluyae jeevanulla devan அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ள தேவன்
அல்லேலூயா அல்லேலூயா
ஜீவனுள்ள தேவன் நீரே
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
உயிரோடிருப்பவரை
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
என்றே முழங்கி ஜெயித்தெழுந்தீர்
சாவை வென்றுவிட்டீர்
சாவாமையுள்ள தேவன் நீரே
சதாகாலமும் ஜீவிக்கின்றீரே
நீண்ட ஆயுள் உள்ளவரே
நிரந்தரமானவரே
முதலும் முடிவும் இல்லாதவரே
ஆதி அந்தம் எல்லாம் நீரே
அநாதி தேவனாய் இருப்பவரே
அழிவில்லாதவரே
கல்லுமல்ல மண்ணும் அல்ல
ஆவியான தேவன் நீரே
மகிமையின் ராஜா ஜீவிக்கின்றீர்
என்னோடு இருக்கின்றீர்
உயிர்த்தெழுதலும் ஜீவனும் நீரே
உமக்குள் மரிப்போர் உயிர்த்தெழுவாரே
இயேசுவின் பின்னே வருவோருக்கு
மரணம் என்றும் இல்லையே