anjiden orupothum அஞ்சிடேன் ஒருபோதும்
1.அஞ்சிடேன் ஒருபோதும்
பதரிடேன் ஒருபோதும்
திகைந்திடேன் ஒருபோதும்
கலங்கிடேன் ஒருபோதும்(2)
புல்லுள்ள பாதைகளில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார் ஒ…ஒ…
என் ஆத்துமா தேற்றுகிறார்
தம் நாமத்தால் நீதிமான் ஆக்கினார்
கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
நான் தாழ்ச்சி அடையேன் என்றும்
அவர் எந்தன் அருகில் இருப்பதால்
நான் பதறிடேனே ஒருபோதும் (2)
2.சோர்ந்திடேன் ஒருபோதும்
சளைத்திடேன் ஒருபோதும்
தயங்கிடேன் ஒருபோதும்
தளர்ந்திட்டேன் ஒருபோதும் (2)
மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்
என் மீட்பரோ ஜீவிக்கிறார்
தினமும் என்னை பாதுகாக்கிறார்
கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
நான் தாழ்ச்சி அடையேன் என்றும்
அவர் எந்தன் அருகில் இருப்பதால்
நான் பதறிடேனே ஒருபோதும் (2)