akkaraiyai nokki அக்கரையை நோக்கி
அக்கரையை நோக்கி செல்லும் விசுவாசியே
அலைகளை பார்க்கையிலே பயம் வேண்டாம்
காற்றையும் கடலையும் அமர்த்திடவே
காத்திடும் கர்த்தர் உன் படகில் உண்டு
விசுவாசக் கப்பலின் பயணத்திலே
விபரீதங்கள் உன்னை தாக்கினாலும்
சோர்ந்திடாதே மனம் பதறிடாதே
சேர்த்திடுவார் உன்னை பத்திரமாய்
என் சொந்த தேசம் இதுவல்லவே
என் புகலிடமும் இங்கில்லையே
அன்பரின் தேசம் நாடிடுவேன்
ஆயத்தம் செய்கிறார் ஸ்தலம் எனக்கு
நீதியின் கர்த்தரே அரசாளுவார்
நித்திய மகிழ்ச்சி அங்கிருக்கும்
நீதியின் வஸ்திரம் அளித்திடுவார்
ஜீவ கிரீடமும் தந்திடுவார்