naalaanadhu adhai vilangappannum eththanmai நாளானது அதை விளங்கப்பண்ணும்
நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும்
நான் செய்வதெல்லாம்
மண்ணென்று நகைத்தோரை
அந்நாளில் பொன்னென்று
கேட்க செய்வீர்உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன் கொண்டு துதிப்பேன்
1)என்னோடு வந்தவர் உண்டு
எனைவிட்டு போனோரும் உண்டு
நடுவோரல்ல பாய்ச்சுவோரல்ல
விளைச்சலை உம்மாலே கண்டேன் – நான்
2)குதிரையை நம்புவோர் உண்டு
இரதத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு
செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தாலல்ல பராக்கிரமமல்ல
ஆவியால் ஜெயமதை அடைந்தேன் – நான்
3)தரிசனம் தந்தவர் நீரே
ஒத்தாசை தருபவர் நீரே
நான் காணும் கானான்
வெகு தூரமானாலும்
நிச்சயம் கொண்டு செல்வீரே – நான்