ennidam ondrum illai endru என்னிடம் ஒன்றுமில்லை என்று
என்னிடம் ஒன்றுமில்லை என்று
எண்ணி தவித்தபோது
உம் அதிசய கரம் நடத்திற்று
தாசன் எலியா காலத்தில்
காகம் மூலம் போஷித்தீர்
தாசன் மோசே காலத்தில்
மன்னா மூலம் போஷித்தீர்
செருப்பும் தேயவில்லை
துணியும் கிழியவில்லை
உம் அதிசய கரம் நடத்திற்று
இரவில் கிடந்து புலம்பினேன்
நடக்கும்போதும் புலம்பினேன்
வறுமை நினைத்து கலங்கினேன்
நிஜத்தை நினைத்து கதறினேன்
உண்ண உணவும் தந்தீர்
உறங்க இடமும் தந்தீர்
உம் அதிசய கரம் நடத்திற்று
நண்பர்களும் மரித்தனர்
உறவினரும் மரித்தனர்
மரண ஓலம் ஒலித்தன
கல்லறைகள் நிரம்பின
உயிருடன் நான் இருக்கிறேன்
சொல்ல சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று
உயிருடன் நான் இருக்கிறேன்
சாட்சி சொல்ல துடிக்கிறேன்
உம் அதிசய கரம் நடத்திற்று