parisuthame paran yesu பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம்
பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம்
பக்தர்கள் தேடும் தேவாலயம்
பரிசுத்தமே
கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று
நிற்கக் கூடியவன் யார்
மாசற்ற செயல் தூய உள்ளம்
உடைய மனிதனே
நாமெல்லாம் பரிசுத்தர் ஆவதே
தெய்வத்தின் திருசித்தம்
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்
தரிசிக்க முடியாது
பரிசுத்தரென்று ஓய்வின்றிப் பாடும்
பரலோக கூட்டத்தோடு
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி
எந்நாளும் பாடுவேன்