en mel ninaivaai iruppavarae என் மேல் நினைவாய் இருப்பவரே
என் மேல் நினைவாய் இருப்பவரே
என்னை விசாரிக்கும் தெய்வமே
உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
என்னை உயர்த்த இறங்கினீரே
கைவிடா கன்மலையே
உம்மை தான் நேசிக்கிறேன்
அழிந்து கொண்டிருந்த
என் ஆத்துமாவை மீட்டு
அழியா உம் ஜீவனையே
என்னில் வைத்தவரே
எனக்கு எதிரான
எண்ணங்களை அழித்து
உமது திட்டத்தையே
நிறைவேற்றி முடிப்பவரே