தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள
Deva Devanai Thuthithiduvom
Deva Devanai Thuthithiduvom
தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்
அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே
1. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போல காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்
2. சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்
4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்