எனக்காகவே யாவையும் செய்து
Enakkagave Yavaiyum Seithu
எனக்காகவே யாவையும் செய்து முடித்தீர்
நன்றி நன்றி ஐயா
என் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரே
நன்றி நன்றி ஐயா………………
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
1. நான் எனது பிள்ளைக்கு நல்ல ஈவைக் கொடுக்கின்றேன்
பரம பிதா அதைப்பார்க்கிலும் கொடுத்துடுவாரே
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
2. அன்றாடம் வேண்டிய ஆகாரம் தாருமே
தீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே
3. ஆபிரகாமை அழைத்திரே ஆசீர்வாதம் கொடுத்தீரே
அது போல என்னையும் ஆசிர்வதியும்
நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாக தருபவரே