nandri niraindha idhayathodu நன்றி நிறைந்த இதயத்தோடு நாதன் இயேசுவை
நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் — நன்றி
1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ — என்
2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் — என்
3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குமே — என்