• waytochurch.com logo
Song # 14754

தேவனே நான் உமதண்டையில் இன்னும்

Devane Naan Umathandaiyil


தேவனே நான் உமதண்டையில் இன்னும்
நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்

மாவலிய கோரமாக
வன் சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

யாக்கோபைப்போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு ராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா வல்ல நாதா

பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்பண்ணும் ஐயா
எந்தன் தேவனே
கிருபையாக நீர் எனக்குத்
தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைக்கும்
அன்பின் தூதராக செய்யும்

நித்திரையினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என்துயர் கல் நாட்டுவேனே
எந்தன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

ஆனந்தமாய் செட்டை விரித்துப்
பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே
சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com