உம்மைப் பாடாமல் யாரை
Ummai Padamal Yarai Nan
உம்மைப் பாடாமல் யாரை நான் பாடுவேன்
உம்மைத் துதிக்காமல் யாரை நான் துதிப்பேன்
துதியும் உமக்கே அல்லேலூயா
கனமும் உமக்கே அல்லேலூயா
மகிமை உமக்கே அல்லேலூயா
புகழ்ச்சி உமக்கே அல்லேலூயா
உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே
உன்னத அனுபவம் தந்தீரே
துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர்
துயரங்களை மகிழ்ச்சியாக மாற்றினீர்
ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உருவாக்கி உயர்த்தின தெய்வமே
ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter