இயேசு ராஜா ஏழை
Yesu Raja Ezhai
இயேசு ராஜா ஏழை என் உள்ளம்
தேடி வந்தீரே
என் நேசர் நீர்தானையா
என்னைத் தேற்றிடும் எனதேசையா
சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே
சீக்கிரம் வாருமையா
உளையான சேற்றினின்று
என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர்
அலைபோல துன்பம் எனை சூழ்ந்தபோது
அன்பாலே அணைத்துக் கொண்டீர்
ஆபத்து காலத்திலே நல்ல
அநுக்கிரகம் துணையும் நீரே
அன்பே என்றீர் மகளே என்றீர்
மணவாட்டி நீ தான் என்றீர்
பரிசுத்த ஆவியினால்
என்னை அபிஷேகம் செய்தீரே
பயங்களை நீக்கி பலத்தையே தந்து
பரிசுத்த மகளாக்கினீர்