என் இயேசுவே என் நேசரே
En Yesuve En Nesare
என் இயேசுவே என் நேசரே
ஏன் இந்த பாடுகளோ
என் இதயம் நெகழிந்திடுதே
உம் முகம் பார்க்கையிலே
கைகளில் கால்களில் ஆணிகளால்
தழும்புகள் ஏற்றது எனக்காகவோ
பெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்
பெலன் தந்து என்னை தாங்கினீரே
தலையினில் முள்முடி துளைத்திடவே
தாகத்தால் தவித்தே துடித்தீரையா
அநாதையை போலவே சிலுவையிலே
அன்பினால் எனக்காக தொங்கினீரே
உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்
உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையா
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என்னையே உமக்காக தருகிறேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter