என் தேவா உம்மை பாடுவேன் இனி
En Deva Ummai Paduven
என் தேவா உம்மை பாடுவேன் இனி
என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்
என்னுயிரே எந்தன் இயேசுவே முழு
மனதால் ஸ்தோத்தரிப்பேன்
எனது வலதுப்பக்கம் நீரே
அசைக்கப்படுவதில்லை நானே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
செய்த நன்மைகள் உலகம் கொள்ளாதே
எந்தன் வாழ்வினிலே
நினைத்து நினைத்து நன்றி
சொல்லத்தானே ஆயுள் போதாதே
மலர் போல் உதிர்கின்ற வாழ்வை
நன்றி சொல்லி கழித்திடுவேன்
உண்மையாய் உம்மை கூப்பிடும் போது
நெருங்கி அருகில் வந்தீர்
உருகி உருகி ஜெபித்திடும் போது
உன்னத பெலன் அளித்தீர்
உலகத்தையே நான் மறந்து
உம்மையே நினைத்திடுவேன்
எந்த பக்கமும் நெருக்கப்பட்டும் நான்
ஒடுங்கிப் போகவில்லை
துன்பத்திலே நான் அமிழ்ந்திட்ட போதும்
கைவிடப்படவுமில்லை
இயேசுவே என் பக்கபலமே
இயேசுவே என் துணையே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter