ஈசாயின் அடி மரமே
Eeshayin Adi Marame
ஈசாயின் அடி மரமே
நேசா நீர் அதன் கிளையே
ஏசாயா உரைத்திடும் மெய்பொருளே
ஏதென்று அறிந்திடுவோம்
திகழும் ஜோதி தவழும் காட்சி
புகழும் நற்செய்தியே மகிழ்ச்சி
ஏக புதல்வன் தேவகுமாரன்
இயேசு கிறிஸ்து இவரே
யூதாவின் பால சிங்கம்
நாதா உம் நாமமோங்கும்
யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம்
யார் என்று விளம்பிடுவோம்
தாவீதின் ஊர் தனிலே
தாயார் மரி மகனே
வான பரன் பிறந்தார் அதனை
வாரும் சென்றுரைத்திடுவோம்
வானோர் பராபரனே
ஏனோ வந்தார் புவியே
பாவியின் அடைக்கலமாய் உதித்தார்
பாரும் நாம் வணங்கிடுவோம்
ஆலோசனை கர்த்தரே
அதிசயமானவரே
கர்த்ததுவம் அவர் தோளிலுண்டே
கண்டே இன்றுணர்ந்திடுவோம்
செங்கோலும் யுதாவிலே
மங்கி மறைந்திடாதே
சமாதான கர்த்தர் வருமளவும்
சேர்ந்தென்றும் முழங்கிடுவோம்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter