எங்கள் ஆராதனைக்குரியவரே
Engal Aarathanai Kuriyavare
எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே
எங்கள் ஆராதனை ஏற்றுக் கொள்ளுமே
எங்கள் யேகோவா தெய்வமே
துணையாளரே உம்மை துதிக்கையிலே
துன்பமெல்லாம் தூசியாக பறக்குதையா
துயரமெல்லாம் நீங்குதையா
துள்ளிப்பாட உள்ளமெல்லாம் ஏங்குதையா
வல்ல தெய்வமே இப்போ வாருமையா
வல்லமையால் எங்களை நிரப்புமையா
வறண்டு போன என் வாழ்க்கையிலே
வாழ்வெல்லாம் வசந்தம் ஆக்குமையா
அன்பின் ராஜனே உம் அபிஷேகத்தை
பிள்ளைகளாம் எங்கள் மேலே ஊற்றுமையா
பெலனடைந்து உம்மை உயர்த்திடவே
கிருபை எங்களுக்கு தாருமையா

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter