என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
Ennai Azhaithavar Unmaiyullavar
என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்
எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்
என்றும் உன்னை நடத்திடுவார்
தடைகள் உன் பாதையிலே
பெருந்துன்ப வேளைகளில்
பதறாமல் இயேசுவை நம்பு
புதுப்பாதை திறந்திடுவார்
நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்
செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லை
சிங்கக் கெபியிலும் அக்கினியிலும்
அவர் சமூகம் உள்ளதினால்
கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்
தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்
உந்தன் அருகில் இயேசு வருவார்
விசுவாசத்தால் அவரைத் தொடு