இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும்
Iratchakar Vantatal Iratchippum
இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு
பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
மேய்ப்பனாய்
ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினி நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே
அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter