ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
Jeeva Thanneerae Aaviyanavarae
ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாரும் ஐயா போதகரே
வற்றாத ஜீவ நதியாக
கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவும் போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே
மிதந்து மிதந்து மகிழணுமே
போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே
கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்